states

img

உ.பி: மின்சார பேருந்து கட்டுப்பாட்டை இழந்து விபத்து - 6 பேர் பலி

உத்தரபிரதேசத்தில் கட்டுப்பாட்டை இழந்த மின்சார பேருந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார், பைக்குகள் சாலையோரம் நின்றிருந்தவர்கள் மீது மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள டாட் கிராஸ் ரோடு பகுதியில் நேற்று இரவு சென்று கொண்டிருந்த மின் மின்சார பேருந்து பழுதானதால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார்கள், இருசக்கர வாகனங்கள் மீதும், கூட்டமாக நின்று கொண்டிருந்தவர்கள் மீதும் சரமாரியாக மோதி பின் டேங்கர் லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் 12 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் உள்ளது.
இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தலைமறைவாக உள்ள பேருந்து ஓட்டுநரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். 
இந்நிலையில் விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.